பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 2021ம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் சென்னை திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிகாடு அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவரது தோழி வள்ளி பவனி ஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. யாஷிகா நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் வருகிற ஜூலை மாதம் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் காரை ஓட்டி வந்தது யாஷிகாதான் என்றாலும் அவர் விபத்தின்போது மது அருந்தவில்லை என்று சான்றிதழ் பெற்றிருப்பதால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.