திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார் கவுதம் மேனன்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை கவுதம் மேனன் எழுதி வருகிறார். அதனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சிம்புவும் ஆர்வமாக இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.