தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீப காலமாக நாகார்ஜூனா, அவரது மகன்கள் அகில், நாக சைதன்யா படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‛கஸ்டடி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட நாக சைதன்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
எப்போதும் வெற்றிகரமான படத்தை கொடுக்கவே நினைக்கிறோம். ரசிகர்களின் எல்லையில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். கடைசியாக வந்த சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. ஒரு தொழிலில் உயர்வு தாழ்வு என்பது சாதாரணமானது தான். அதன் வழியாகத்தான் நாம் பயணித்தாக வேண்டும். இதுவும் கடந்து போகும். நிச்சயமாக திரும்பி வருவோம். 'கஸ்டடி' படம் மீது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று நம்புகிறேன்” என்றார்.