பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த மார்ச் 31ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சேத்தன், கவுதம் மேனன், நாயகி பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் தங்களது நடிப்புக்காக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றனர். ரிலீஸான சமயத்திலேயே தமிழ்நாட்டையும் தாண்டி இந்த படம் மற்ற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் இந்த படத்தில் ஆயுதப்படை கான்ஸ்டபிள்களில் ஒருவராக நடித்திருந்த கன்னட நடிகர் சர்தார் சத்யா என்கிற எஸ் சத்யா என்பவர் இந்த படம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதை தொடர்ந்து தனக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
“கடந்த 2007ல் இருந்து கன்னட சினிமாவில் பயணித்து வந்தாலும் இதுவரை தான் கற்றுக் கொண்ட விஷயங்களில் இருந்து முற்றிலும் மாறாக வெற்றிமாறனிடம் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.. சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை விடுதலை படத்தில் நடித்த பிறகு தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்” என்று சிலாகித்து கூறியுள்ளார் நடிகர் எஸ் சத்யா