தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை: எஸ்.பி.பி., சித்ரா ஆகியோரின் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ்-கோட்டி காலமானார்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் டி.வி.ராஜ். இவரின் இயற்பெயர் தோட்டக்குரா சோமராஜூ. இவர் கோட்டி என்பவருடன் இணைந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார்.
ராஜ்-கோட்டி இசையமைப்பாளர்கள் கிட்டத்தட்ட 180 படங்களுக்கு இசையமைத்து உள்ளனர். இவர்களின் இசையில் எஸ்.பி.பி., மற்றும் சித்ரா சுமார் 2,500 பாடல்களை பாடி உள்ளனர். 1994 ம் ஆண்டு நாகார்ஜூன் நடிப்பில் வெளியான ஹாய் பிரதமர் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர்கள் என்ற நந்தி விருதை ராஜ்-கோட்டி பெற்றனர். சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ராஜ்-கோட்டி இணை பிரிந்தது. சமீபத்தில் நடைபெற்ற நேர் காணல் ஒன்றில் மீண்டும் இருவரும் இணைவதாக அறிவித்தனர்.
ராஜ்- கோட்டி இணையில் ஏ.ஆர்.ரகுமான் சாப்ட்வேர் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ராஜ் மற்றும் கோட்டியை தனது சகோதரர்கள் என்றும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் திடீரென மரணம் அடைந்தார். ராஜ் மரணம்இசையமைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.