பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னை: எஸ்.பி.பி., சித்ரா ஆகியோரின் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ்-கோட்டி காலமானார்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் டி.வி.ராஜ். இவரின் இயற்பெயர் தோட்டக்குரா சோமராஜூ. இவர் கோட்டி என்பவருடன் இணைந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார்.
ராஜ்-கோட்டி இசையமைப்பாளர்கள் கிட்டத்தட்ட 180 படங்களுக்கு இசையமைத்து உள்ளனர். இவர்களின் இசையில் எஸ்.பி.பி., மற்றும் சித்ரா சுமார் 2,500 பாடல்களை பாடி உள்ளனர். 1994 ம் ஆண்டு நாகார்ஜூன் நடிப்பில் வெளியான ஹாய் பிரதமர் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர்கள் என்ற நந்தி விருதை ராஜ்-கோட்டி பெற்றனர். சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ராஜ்-கோட்டி இணை பிரிந்தது. சமீபத்தில் நடைபெற்ற நேர் காணல் ஒன்றில் மீண்டும் இருவரும் இணைவதாக அறிவித்தனர்.
ராஜ்- கோட்டி இணையில் ஏ.ஆர்.ரகுமான் சாப்ட்வேர் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ராஜ் மற்றும் கோட்டியை தனது சகோதரர்கள் என்றும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் திடீரென மரணம் அடைந்தார். ராஜ் மரணம்இசையமைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.