ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
கன்னடத்தில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக்கியவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதைத்தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் வரை சலார் படம் குறித்த இப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார் பிரசாந்த் நீல்.
ஆனால் இதற்கு முன்னதாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பாதிக்க வேண்டாம் என சவால் குறித்த தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார் பிரசாந்த் நீல். ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை விட சலார் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.
இதனால் இவர்களுக்கு பதில் சொல்வதை விட தற்காலிகமாக சோசியல் மீடியாவை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்து வெளியேறியுள்ளார் பிரசாந்த் நீல். இது பிரபாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.