பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னை: கில்லி படத்தில் நடித்திருக்கும் நடிகர் தன்னுடைய 60-வயதில் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கில்லி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், கதாநாயகன் விஜய்ககு தந்தையாகவும் நடித்திருப்பவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி . இவர் இந்தி,தெலுங்கு, தமிழ், கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த 1995-ல் ட்ரோஹ்கால் படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.
60 வயதாகும் ஆஷிஷ் வித்யார்த்தி தொழிலதிபரான ரூபாலி பருவா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர் அசாமை சேர்ந்தவர். ரூபாலி பருவா முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளாவார்.
இந்த புதிய ஜோடி நண்பர்கள் முன்னிலையில் கோல்கட்டாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர்களது திருமண போட்டோக்கள் சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது.இருப்பினும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி பெயர் ராஜோஷி வித்யார்த்தி. இவர் 1993-ல் டைம்ஸ் எப்.எம் என்ற எப்.எம். ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆஷிஷ் வித்யார்த்தி ராஜோஷி வித்யார்த்தியின் தம்பதிக்கு பிறந்தவர் ஆர்த் வித்யார்த்தி. இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். 23 வயதான ஆர்த் வித்யார்த்தி தந்தையின் இரண்டாவது திருமணத்திற்கு ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.