நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகர் குரு சோமசுந்தரம் குணசித்திர நடிகராக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் மின்னல் முரளி படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு அவர் 'ஜோக்கர்' படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது; " அடுத்து ஒரு புதிய படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இயக்குனர் தினகரன் இயக்கும் இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நடராஜன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.
இது அல்லாமல், மலையாளத்தில் மோகன்லால் இயக்கியுள்ள 'பரோஸ்' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். தமிழில் 'இந்தியன் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இப்பொழுது மொழியை கடந்தது சினிமா மற்ற மொழி பார்வையாளர்களுக்காக அந்தந்த மொழி நடிகர்கள் தேவைப்படுவது கலைஞர்களுக்கு நல்லது" என்று இவ்வாறு குரு சோமசுந்தரம் கூறினார்.