பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக கவர்னர் பற்றியும், நடிகையும், பாஜக.,வை சேர்ந்தவருமான குஷ்புவையும் தகாத வார்த்தைகளில் பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாக பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து திமுக., நீக்கியது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு கூறியதாவது: பெண்களை இழிவாக பேசுவோரை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும். என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். தி.மு.க.,வினர் அவதூறாக பேசுகின்றனர். இதற்காகவே கட்சியில் சேர்க்கின்றனர். கருணாநிதி தலைமையிலான தி.மு.க.,விற்கும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,விற்கும் வித்தியாசம் உள்ளது. அது தான் திராவிட மாடல் போல.
பெண்ணாக சொல்கிறேன் என்னை சீண்டிப் பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க. பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. பெண்களுக்கு பிரச்னை என்றால் நான் நிற்பேன். பெண்களை கேவலமாக பேசுவதை நிறுத்துங்கள். பெண்கள் குறித்து திமுக மட்டும் அல்ல வேறு எவர் பேசினாலும் தவறு தான். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
இவ்வாறு குஷ்பு ஆவேசமாக பேசினார். இடையில் அவர் பேசும்போது கண்கலங்கவும் செய்தார்.