இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பிறகு அவர் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' ஆகியவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கவில்லை.
அதற்கடுத்து கடந்த வாரம் வெளிவந்த 'ஆதிபுருஷ்' படமும் வெளியீட்டிற்கு முன்பு கடும் விமர்சனங்களைத்தான் பெற்றது. வெளியீட்டிற்குப் பின்பும் எதிர் விமர்சனங்களும், சர்ச்சைகளும் வந்தாலும் படம் நான்கு நாட்களில் 375 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதனால், பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சலார்' படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நேற்று 'சலார்' படத்தின் 'கவுண்ட் டவுன்' போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். “சாட்சியாவதற்கு இன்னும் 100 நாட்கள்” என்ற வாசகங்களுடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் என்பதால் இப்படம் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பெரும் வசூலைக் குவித்த 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, பதான்' ஆகிய படங்களின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று இந்திய பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.