பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் 10ம் தேதிதான் இப்படம் வெளியாக உள்ளது. ஆனால், நாளை ஜுன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலை வெளியிட உள்ளார்கள். அதற்கான 33 வினாடிகள் புரோமோ நேற்று மாலை வெளியானது. அந்த வீடியோவே அதற்குள்ளாக 56 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது. அப்படியென்றால் நாளை பாடல் வெளிவந்த பின் அது எத்தனை லட்சம் போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, புரோமோவில் உள்ள அந்த நான்கு வரிகளிலேயே அரசியல் கலந்த வரிகளாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நா ரெடி தா வரவா, அண்ணன் நா எறங்கி வரவா…
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்து என் ரூட்டு மாறாதப்பா..
தெரண்டடிக்குற பறை அடிக்கணு, நா ஆட தான்..
வெரலடிக்குற தீ பந்தம் நா ஏத்த தான்..,” என வரிகள் உள்ளன.
“இறங்கி வரவா, சிங்கத்த சீண்டாதப்பா, தடுத்தாலும் ரூட்டு மாறாதப்பா, தீ பந்தம் நா ஏத்த தான்” ஆகிய வார்த்தைகளில் உள்ள அரசியல் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விஜய் பேசியது, அவர் அரசியலில் இறங்குவாரா, மாட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. 'லியோ' படத்தின் இந்த முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலில் உள்ள அர்த்தம் அவர் விரைவில் அரசியலில் இறங்குவார் என்பதையே காட்டுகிறது.