பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கமல் நடிப்பில் ‛இந்தியன் 2' படத்தையும், ராம் சரண் நடிப்பில் ‛கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்ததும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம் சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை முடித்த பிறகு தான் வேள்பாரி நாவலை தழுவி உருவாகும் படத்தை மூன்று பாகங்களாக பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்குவதற்கு ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.