ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல் நடிப்பில் ‛இந்தியன் 2' படத்தையும், ராம் சரண் நடிப்பில் ‛கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்ததும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம் சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை முடித்த பிறகு தான் வேள்பாரி நாவலை தழுவி உருவாகும் படத்தை மூன்று பாகங்களாக பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்குவதற்கு ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.