பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ்குமார், 'ஜெயிலர்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். படத்தில் ரஜினிக்கு உதவி செய்யும் 'நரசிம்மா' என்ற ஒரு தாதா கதாபாத்திரத்தில் சிறிது நேரமே படத்தில் வருகிறார். இருந்தாலும் அவரது காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அவரது காட்சிகளுக்கு நல்ல ஆரவாரம் கிடைத்துள்ளது. அதற்காக வீடியோ மூலம் கன்னடத்திலும், தமிழிலும் நன்றி தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' படம் இப்ப எல்லா இடத்துலயும் நல்ல கலெக்ஷனோட ஓடிட்டிருக்கு, நல்ல ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு. நான் மோகன்லால் சார், ஜாக்கி ஷெராப், தமன்னா எல்லாரும் கேமியோ ரோல் பண்ணியிருக்கோம். இந்த அன்பைக் கொடுத்ததுக்காக நேரடியாக ஒரு நன்றி சொல்லணும். நெல்சன் குறிப்பாக ரஜினி சாருக்கு... அவர் கூட நடிக்கணும்னு எவ்வளவோ பேர் காத்துட்டிருக்காங்க. எனக்கு அந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சி, குஷி. நீங்க கொடுத்த அன்பை எப்போதும் என் இதயத்துல வச்சிருப்பேன், நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சிவராஜ்குமார்.