பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இது அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது மார்க்கெட் உயர்த்துவதற்காக மற்ற மொழிகளிலும் படம் நடித்து வருகிறார். அவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவாக உள்ள இந்த புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் இப்படத்திற்கு ' கோலி' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.