தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இது அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது மார்க்கெட் உயர்த்துவதற்காக மற்ற மொழிகளிலும் படம் நடித்து வருகிறார். அவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவாக உள்ள இந்த புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் இப்படத்திற்கு ' கோலி' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.