ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இது அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது மார்க்கெட் உயர்த்துவதற்காக மற்ற மொழிகளிலும் படம் நடித்து வருகிறார். அவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவாக உள்ள இந்த புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் இப்படத்திற்கு ' கோலி' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.