இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பிரபல சின்னத்திரை நடிகையான வைஷாலி தனிகா விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைத்து வந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முகமாக வலம் வரும் வைஷாலி தனிகா ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார். அண்மையில், வைஷாலி தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் பயணித்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் வளைவில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், 'காரில் சீட் பெல்ட் போட்டிருந்ததால் தப்பித்தேன். இல்லையேல் பெரும் விபத்தாக மாறியிருக்கும். காரில் சீட் பெல்ட் போடுவதில் எனக்கு முதல் உடன்பாடு கிடையாது. ஆனால், இப்போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே, கட்டாயம் அனைவரும் சீட் பெல்ட் போடுங்கள். பைபாஸில், வளைவுகளில் கவனமாக செல்லுங்கள்' என தனக்கு கழுத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்தை காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.