இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரத்திலும் அந்த ஓட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி குறித்து படத்தில் நடித்த பலரும் தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் சோசியல் மீடியாக்கள் மற்றும் டிவி சேனல்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் வெற்றி குறித்து தங்களது மகிழ்ச்சியை தவறாமல் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆனால் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அனைவரையும் கவர்ந்த, படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த வில்லன் நடிகர் விநாயகன் மட்டும் இவ்வளவு பெரிய வெற்றியிலும் சத்தம் காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார். படம் வெளியாவதற்கு முன்பும் சரி தற்போது வெளியாகி வெற்றி பெற்ற பின்பும் சரி அவரது பேட்டி, கருத்து என எங்கேயும் பார்க்க முடியவில்லை.
பொதுவாகவே அவர் மீடியாக்களில் பேட்டி அளித்தால் ஏதோ ஒரு வகையில் சர்ச்சை கிளம்பி விடுவது தான் இதுவரை வாடிக்கையாக இருந்து வருகிறது, கடந்த மாதம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானபோது அதுகுறித்து இவர் சோஷியல் மீடியாவில் சர்ச்சையாக பேசி வெளியிட்ட வீடியோவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்தன. அதனால் தானோ என்னவோ இப்போதுவரை மீடியாக்களில் தலைகாட்ட மறுத்து ஒதுங்கி இருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.