தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா, மாதவன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜோதிகா, பிரியங்கா மோகன் என இரு கதாநாயகிகள் நடிப்பதாக கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வெளியாகவில்லை. மேலும் இந்த படம் அரசியல் தொடர்பான கதையாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆகவே மல்டி ஸ்டார் படமாக இதை எடுக்க மேற்சொன்ன நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.