ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மலையாள சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். மம்முட்டியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் வெளியிடும் பதிவு கவனிக்கத்தக்கதாக இருக்கும். அந்த வரிசையில் நேற்று அவர் தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாக பரவியது.
அவர் தனது வாழ்த்து பதிவில் “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப் போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதாவது என் வாழ்நாளில் நீங்கள் படைத் சாதனைகளில் பாதியையாவது நான் படைத்து விடுவேன் என்கிற பொருள்படும்படியான இந்த பதிவு துல்கர் தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு. தன் மீது கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இவற்றை குறிப்பதாக பலரும் துல்கரை பாராட்டி வருகிறார்கள். இந்த பதிவுடன் தந்தையுடன் நிற்கும் கருப்பு வெள்ளை படத்தையும் துல்கர் வெளியிட்டுள்ளார்.