பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி ஓம்ராவத் இயக்கிய இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் அவரது மனைவி சீதாவாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் நடித்திருந்தனர். இதில் சீதாவாக கிர்த்தி சனோனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் மாறி உள்ள கிர்த்தி சனோன் ப்ளூ பட்டர்பிளை பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி முதல் படமாக 'டு பட்டி' என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
பிரபல பாலிவுட் கதாசிரியரான கனிகா தில்லானும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். சசாங்கா சதுர்வேதி இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்க முக்கிய வேடத்தில் நடிகை கஜோல் நடிக்கிறார். சமீப நாட்களாக உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கிர்த்தி சனோன் மற்றும் கனிகா தில்லான் இருவரும் மரியாதை நிமித்தமாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு குறித்து கிர்த்தி சனோன் கூறும்போது ,‛உத்தரகண்ட் மாநிலம் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற அழகான சுற்றுலா அம்சங்களுடன் கூடிய மாநிலமாக மாறி வருகிறது' என்று தனது பாராட்டுக்களை உத்தரகண்ட் முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.




