பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடியிருந்த காவாலா என்ற பாடல் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது சுந்தர்.சி-யின் ‛அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போது தான் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும், தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு, தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கமர்ஷியல் விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதில் என்னுடைய கதாபாத்திரங்களுடன் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதுபற்றி சில இயக்குநர்களிடம் சொல்லியும் கூட எந்த பயனும் இல்லை. இதனால் ஒரு கட்டத்தில் அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்'' என்கிறார்.