அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பஹத் பாசில். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகமாக வித்தியாசமாக இருக்கும். மலையாளம் தாண்டி தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். அதேப்போல் தெலுங்கு சினிமாவில் புஷ்பா படத்திலும் மிரட்டினார். தொடர்ந்து இவருக்கு பன்மொழிகளில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இப்போது ரஜினியின் 170வது படத்திலும் இவர் இணைந்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 170வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் துவங்குகிறது. இதற்காக ரஜினி இன்று(அக்., 3) அங்கு விமானம் மூலம் சென்றார். தொடர்ந்து நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் இன்று ராணாவை தொடர்ந்து பஹத் பாசிலும் நடிப்பதாக அறிவித்துள்ளனர். படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.
இந்த படம் சமூகத்திற்கு நல்லதொரு கருத்தை கூறும் படமாக, பிரமாண்டமாய் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.