பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே தமிழகத்தில் ஆரம்பமாக வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனால், இங்கு அதிகாலை காட்சிகள் நடைபெற முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் முதல் நாள் காட்சிகள் ஆரம்பமாகின்றன.
எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையோரம் இருக்கும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் 'லியோ' படத்தை சீக்கிரமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களாம். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு அவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.