திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே தமிழகத்தில் ஆரம்பமாக வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனால், இங்கு அதிகாலை காட்சிகள் நடைபெற முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் முதல் நாள் காட்சிகள் ஆரம்பமாகின்றன.
எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையோரம் இருக்கும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் 'லியோ' படத்தை சீக்கிரமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களாம். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு அவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.