பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். நேரம் படத்தையும் இவர் தான் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் தந்த வரவேற்பு அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‛கோல்டு' படத்திற்கு கிடைக்கவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்விக்காக வருத்தம் தெரிவித்த அல்போன்ஸ் அடுத்த படத்தை அதை சரி செய்வதாக கூறினார்.
தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சினிமா படம் மட்டும் இனி இயக்க மாட்டேன், விலகுவதாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவில், ‛‛தியேட்டர்களுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்த போகிறேன். எனக்கு ‛ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்' குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால் தொடர்ச்சியாக ஆல்பம், குறும்படங்கள் மற்றும் ஓடிடி தொடர்பான படங்களை எடுப்பேன். நிச்சயமாக சினிமாவை விட்டு போக மாட்டேன். ஏனென்றால் அதைதவிர எனக்கு வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்ரனின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.