தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் ரவிக்குமார், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு சுதா மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடித்த பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.