பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மாநில அளவில் ரசிகர்களை சந்திக்க, நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த லியோ பட வெற்றி விழாவில், அவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. இது, ரசிகர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநில அளவில் ரசிகர்களை சந்திக்க விஜய் முடிவு எடுத்து உள்ளார். அரசியல் கட்சி மாநாட்டை போல, இந்த சந்திப்பு அமைய வேண்டும். தன் பலத்தை அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என, மன்ற நிர்வாகிகளிடம் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இடம் தேடும் பணியில் மன்ற நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். மதுரை அல்லது திருச்சியில் இந்த சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்ச்சியில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய படத்தில் நடிக்கும் விஜய், வெளிநாட்டில் அதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து தமிழகம் திரும்பியதும், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த ஆலோசனை நடந்து வருகிறது.