பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171-வது படத்தில் நடிக்கப் போகிறார். அதோடு ஜெயிலர் படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. முன்னதாக ரஜினியின் பேரன்களான யாத்ரா, லிங்கா இருவரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.