தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு கார் சேஸிங் சண்டைக்காட்சியில் நடித்து முடித்துவிட்டு நேற்றுதான் சென்னை திரும்பினார் விஜய்.
மேலும் இந்த படத்தில் விஜய், அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் விஜய் நெகட்டீவ் ரோலில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிரியமுடன், அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் பாசிட்டிவ் - நெகட்டிவ் வேடங்களில் நடித்த விஜய், தற்போது 68வது படத்திலும் அதே பாணியில் நடிக்கிறார்.