இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் மோகன். மதுரையை சேர்ந்த இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சினிமாவை விட்டும் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இன்று(டிச, 9) காலை அவரது உயிர் பிரிந்தது.
40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரும் புகழை தந்தது ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‛முண்டாசுப்பட்டி' படம் தான். தொடர்ந்து ஏஆர்கே சரவண் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான ‛வீரன்' படத்திலும் நடித்து அசத்தினார். பெரும்பாலும் கிராமத்து கலந்த வேடங்களிலேயே நடித்தார். ரஜினி முருகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் காளி வெங்கட், ‛‛ஐயா நடிகர் மதுரை மோகன், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம் குமார், “வீரன்” பட இயக்குனர் ஏஆர்கே சரவண் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.