இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பரியேறும் பெருமாள் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் மாரி செல்வராஜ் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார். தனது இரண்டாவது படமாக தனுஷை வைத்து இவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாமன்னன், வாழை என அவர் படங்களை இயக்கிய நிலையில் அடுத்ததாக மீண்டும் தனுஷ் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு கடந்த வருடமே அதிகாரப்பூர்வமாக வெளியானது.. இந்த நிலையில் இந்தப் படம் தனக்கு ஒரு லைப் டைம் செட்டில்மெண்ட் படம் போல இருக்கும் என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் மேடையில் பேசும்போது, “கர்ணன் படத்தை தொடர்ந்து அதைவிட மிகப்பெரிய படம் ஒன்றை கொடுக்க வேண்டும் என தனுஷ் விரும்பினார். அந்த படம் நிச்சயமாக லோகேஷ் கனகராஜுக்கு கைதி, விக்ரம் படங்கள் எப்படியோ அதுபோல எனக்கு ஒரு லைப் டைம் செட்டில்மென்ட் படமாக இருக்கும்” என்று கூறினார்.