இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த டிசம்பர் 29, 2023 மாலை 7 மணிக்கு கனடா தமிழர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு டொரொண்டோவில் அஞ்சலி செலுத்தினர். கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் அஞ்சலி உரையின் போது கேப்டன் விஜயகாந்த்தின் சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பாசமான நண்பர் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்.
படைப்பாளிகளின் உலகம் ஆசிரியர் நந்தன் கதிர்காமநாதன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி கவிதை பாடினார். இந்த அஞ்சலி கூட்டத்தில் எஸ்டேட் மண்டப உரிமையாளர் ராஜா, சமூகம் ஊடக நண்பர் கிருபா, செய்தி.காம் ஊடக நண்பர் குணா, பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா சுப்பிரமணி, சிறுமி.ஹரிணி வள்ளிக்கண்ணன் ஆகியோர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி பேசினார்கள். ஊடக நண்பர்கள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.