பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மீனா, கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக மீனாவின் கணவர் மறைந்து விட்டார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரி போன்ற படங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தொடர்ந்து ஊடகங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு ஹீரோ இதுபோன்று மறுமணம் செய்யாமல் இருந்தால் அவரைப் பற்றி எந்த வதந்திகளும் வெளிவருவதில்லை. அதுவே ஒரு ஹீரோயின் கணவரை இழந்து தனியாக இருந்தால் மட்டும் இது போன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். எத்தனையோ பெண்கள் கணவரை இழந்தும் தனியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டி வருகிறார்கள். அதனால் நானும் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் எனது மகள் நைனிகாவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதுமே எனது வாழ்வில் இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி தன்னைப்பற்றி வெளியாகிவரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா.