பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி வைரலாக பரவியது. அதேபோன்று தற்போது அவர் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி வைரலாகி உள்ளது.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சினேகா, லைலா, பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, வைபவ், ஜெயராம், மைக் மோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. 3வது கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. புத்தாண்டு விடுமுறை மற்றும் 'கலைஞர் 100' விழா விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் விஜய் தாடி மீசை எடுத்து இளம் வயது தோற்றத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண தினசரி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார். இளமையான தோற்றத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.