தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை வந்தாலே நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு கூடும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 15) ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தார். அதோடு, வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர் ரஜினி ரசிகர்களின் தொல்லை பற்றி பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‛‛தலைவா தலைவா என ரசிகர்கள் கோஷம் போடுவார்கள். எங்களை மாதிரி இந்த தெருவில் உள்ள 21 வீட்டுக்காரங்க கஷ்டப்படுகிறார்கள். ஏன் உங்க(ரஜினி) வீட்டு கேட்டை திறந்து உள்ளே விட வேண்டியது தானே. தலைவரை பார்க்க வேண்டியது தானே. நீங்க கேட்டை மூடியே வைக்கிறீங்க. இவங்க எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி வந்து தான் இப்படி கத்தி கூச்சலிடுகிறார்கள். நாங்களும் வரி கட்டுறோம் ஆனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. போதாகுறைக்கு காலையில இப்படி பண்டிகை தினமும் அதுமா இப்படி தொந்தரவு செய்றாங்க. சாமி கூட கும்பிட முடியவில்லை'' என்றார்.