பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருவதோடு, அவ்வப்போது இமயமலைக்கு சென்று பாபாஜியை வணங்கிவிட்டு வருவார். இதன் காரணமாகவே அவரை சோசியல் மீடியாவில் சங்கி என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், லால் சலாம் படத்தின் இசை விழாவில் அப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி, என் தந்தை சங்கி இல்லை என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக சித்தரிக்க முடியாது. அவர் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர். பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர்களும் சூப்பர் ஸ்டாராக வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுமட்டுமின்றி ஆன்மிகத்தையும் சினிமா வாழ்க்கையும் தனித்தனியே பார்க்க கூடியவர் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.