பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் வெளியான படம் 'அயலான்'. இப்படத்தையும் 'கேப்டன் மில்லர்' படத்தையும் ஒரே நாளில் தெலுங்கில் வெளியிட அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால், இரண்டு படங்களின் வெளியீடும் ஜனவரி 26க்குத் தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் 'கேப்டன் மில்லர்' படம் மட்டும் வெளியானது. ஆனால், 'அயலான்' படம் வெளியாகவில்லை.
படத்திற்கு 'டிஐ' தொழில்நுட்பம் செய்து தந்த ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்திற்கு 'அயலான்' தயாரிப்பாளர் முழு தொகையையும் தராமல் பாக்கி வைத்ததால்தான் அவர்கள் தெலுங்கு பதிப்பு வெளியீட்டிற்காக நீதிமன்றத் தடை வாங்கியதாகத் தகவல் வெளியானது.
கடந்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ் பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், தெலுங்கு பதிப்பு ஓடிடியிலும் வெளியாகவில்லை. தியேட்டர் வெளியீடு பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரையில் இல்லை. தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
தெலுங்கு வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் வெளியீட்டிற்காகவும், அதன் வரவேற்புக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்கள். “எங்கள் குறிப்பிடத்தக்க பயணத்தை அரவணைப்புடனும், அன்புடனும் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. அயலான் - இதயங்களை வென்றவன்,” என 'நன்றி கார்டு' போட்டு முடித்துவிட்டார்கள்.