ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியாவின் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். உருமி உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். தேசிய விருது, பிலிம்பேர், பல்வேறு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவருக்கு தற்போது ‛பியர் ஆஞ்சனியூஸ்' என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒளிப்பதிவில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் மே 24ல் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.