இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சூது கவ்வும். அதையடுத்து சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தர்மம் வெல்லும் என்ற பெயரில் உருவாக இருந்தது. சூர்யாவிடத்தில் கதை சொல்லி இருந்தார் நலன் குமாரசாமி. பின்னர் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. அதன்பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி.
இந்த நிலையில்தான் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் எஸ்.ஜே என்பவர் இயக்கிய நிலையில் தற்போது, சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் நலன் குமாரசாமி. இரண்டாம் பாகத்திற்காக சூர்யா நடிப்பில் தர்மம் வெல்லும் என்ற பெயரில் எழுதி வைத்திருந்த அதே கதையை தற்போது மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கப்போகிறாராம் நலன் குமாரசாமி.