பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சூது கவ்வும். அதையடுத்து சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தர்மம் வெல்லும் என்ற பெயரில் உருவாக இருந்தது. சூர்யாவிடத்தில் கதை சொல்லி இருந்தார் நலன் குமாரசாமி. பின்னர் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. அதன்பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி.
இந்த நிலையில்தான் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் எஸ்.ஜே என்பவர் இயக்கிய நிலையில் தற்போது, சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் நலன் குமாரசாமி. இரண்டாம் பாகத்திற்காக சூர்யா நடிப்பில் தர்மம் வெல்லும் என்ற பெயரில் எழுதி வைத்திருந்த அதே கதையை தற்போது மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கப்போகிறாராம் நலன் குமாரசாமி.