பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்களுக்குக் கூட இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததா என்று வியக்கும் அளவிற்கு 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் சிதம்பரம் மற்றும் குழுவினர் இங்கு பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள்.
அப்படம் 'குணா' படத்தில் இடம் பெற்ற குகையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். அப்படத்தின் தாக்கத்தால்தான் இந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தையே உருவாக்கினர். அதனால், தமிழகத்திலும் படம் பிரமாதமாக ஓடி 50 கோடி வசூலைக் கடந்தது.
படம் வெளியான சில தினங்களிலேயே 'குணா' நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். அடுத்து தனுஷ், விக்ரம், சிம்பு உள்ளிட்டவர்களும் அவர்களைப் பாராட்டினார்கள். இப்போது ரஜினிகாந்தும் அவர்களை அழைத்து பாராட்டியுள்ளார்.
தமிழில் வந்த சில நல்ல படங்களுக்குக் கூட இப்படிப்பட்ட பாராட்டுக்களை இந்த டாப் நடிகர்கள் அளித்திருக்க மாட்டார்கள். ஆனால், மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினரை மனப்பூர்வமாகப் பாராட்டியுள்ளார்கள். எந்த ஒரு மலையாளப் படக் குழுவினருக்கும் கிடைக்காத பெருமை இது.