'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் வாகனங்கள் உட்பட பலவற்றை நிறுத்தியும் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று (ஏப்.7) கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சு வாரியர் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நடிகையின் காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.