‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் வாகனங்கள் உட்பட பலவற்றை நிறுத்தியும் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று (ஏப்.7) கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சு வாரியர் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நடிகையின் காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.