தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சூர்யாவும் அவருக்குத் திருப்புமுனை தந்த இயக்குனர்களும், அந்த இயக்குனர்களுக்கு பதிலுக்கு 'திருப்பு' முனை தந்த சூர்யாவும் எனவும் பேசலாம் போலிருக்கிறது.
காதல் நாயகனாக வலம் வந்த சூர்யாவுக்கு 'நந்தா' படம் மூலம் ஒரு 'டெரர்' லுக்கைத் தந்து அவரை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் பாலா. அதற்குப் பிறகு 'காக்க காக்க' படத்தின் மூலம் அந்த மாற்றத்தை முன்னேற்றியவர் இயக்குனர் கவுதம் மேனன். அதற்கும் பிறகு மாற்றம், முன்னேற்றம், வசூல் என 'சிங்கம்' படம் மூலம் உயர்த்தியவர் இயக்குனர் ஹரி.
அவர்கள் வாங்கித் தராத தேசிய விருதை நடிப்புக்காகவும், தயாரிப்புக்காகவும் 'சூரரைப் போற்று' படம் மூலம் சூர்யாவுக்கு வாங்கித் தந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா.
மேலே, சொன்ன நால்வரும் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தப் படங்கள் 'டிராப்' ஆன வரலாற்றில் ஒன்றாகி உள்ளனர்.
சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்', சூர்யா - ஹரி கூட்டணியில் 'அருவா', சூர்யா - பாலா கூட்டணியில் 'வணங்கான்' ஆகிய படங்கள் டிராப் ஆகின. அந்த வரிசையில் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானுறு' படமும் இணைந்து விட்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். படத்திற்கான இறுதி வடிவத்தை சூர்யாவிடம் சுதா தந்ததாகவும், அது சரியில்லை என சூர்யா நிராகரித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால்தான் அந்தப் படத்திற்கான தேதிகளை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பிடித்துப் போக அப்படத்தின் அறிவிப்பு வந்ததாம். சூர்யாவுக்காக மீண்டும் வேறொரு கதையை சுதா எழுதுவாரா அல்லது அவர் எழுதிய கதைக்கு வேறொரு ஹீரோவைத் தேடுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.