பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக., அமைச்சருமான ஆர்எம் வீரப்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ஆர்எம்வி., பணத்திற்கு பின்னால் என்றும் போனது கிடையாது. அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் அரசியலில் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என வாழ்ந்தவர். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நபர் அவர். அவருடன் எனக்கான நட்பு ஆழமானது, உணர்ச்சிகரமானது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸில் "இராணுவ வீரன், மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா" என 6 படங்களில் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா அஞ்சலி
ஆர்எம் வீரப்பன் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் அஞ்சலி
முன்னதாக மருத்துவமனையில் இருந்த ஆர்எம் வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.