பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கிரைம் திரில்லர் படங்கள் என்பது இந்தக் காலத்தில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் அம்மாதிரியான படங்களைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு.
தமிழ் சினிமாவில் 70 வருடங்களுக்கு முன்பே அதிரடியான ஒரு கிரைம் திரில்லர் படத்தை வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் பெயர் 'அந்த நாள்'. அப்படம் வெளியாகி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரபல வீணை இசைக்கலைஞரான எஸ்.பாலசந்தர் இயக்கிய படம். சிவாஜிகணேசன், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்த படம்.
பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் 'ரசோமன்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் ஏவி மெய்யப்பன், ஜப்பான் சென்றிருந்த போது அந்தப் படத்தைப் பார்த்தார். அப்படியான புதுமையுடன் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இப்படத்தில் கதாநாயகன் சிவாஜி கதாபாத்திரம் வெளிநாட்டு உளவாளி. அவரது மனைவி பண்டரிபாய் நாட்டுப்பற்று மிக்கவர். கணவன் சிவாஜியைக் கொன்றதற்காக நீதிமன்றக் கூண்டில் பண்டரிபாய் நிற்பார். சாட்சிகள் என்ன நடந்தது என்பதைச் சொல்லும் பாணியில் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். சிவாஜியின் காதலியாக சூர்யகலா, சிஐடி அதிகாரியாக படத்திற்குக் கதை எழுதிய ஜாவர் சீதாராமன் நடித்திருந்தார்கள்.
சுமார் 20 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம். ஆனால், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறப்பான முதல் திரில்லர் படம் என்ற பெருமையை 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.