பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமீபகாலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த போதை மாபியா தொடர்பாக கடந்த மாதம் ஜாபர் சாதிக் என்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மதுரையில் இரவு நேரத்தில் சில போதை இளைஞர்கள் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சக்திவேல், தானும் இது போன்று போதை ஆசாமிகளில் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, சில போதை ஆசாமிகள் தன்னிடம் வழி மறித்து வம்பு இழுத்து தாக்க முயற்சித்ததாகவும் அதே சமயம் அந்த நேரத்தில் பொதுமக்கள் உதவியுடன் தான் தப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் காவல்துறை இந்த போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.