'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? |

சுந்தர். சி இயக்கம், நடிப்பில் வெளியாகி உள்ள ‛அரண்மனை 4' படம் வரவேற்பை பெற்றுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைக்கு வந்து மூன்று நாட்களில் 34 கோடி வசூலித்திருக்கிறது. இதனால் சுந்தர் சி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி உள்ளனர். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி உள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார் சுந்தர். சி.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் மீண்டும் இந்த மூன்றாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு கலகலப்பு படத்தின் முதல் இரண்டு பாகங்களை போலவே இந்த மூன்றாம் பாகமும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் உருவாக போகிறதாம்.