பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'கேஜிஎப்' படம் மூலம் பான் இந்தியா இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது 'சலார் 2' வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தை முடித்த பின் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்காக 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தனர். ஆனால், ஹிந்தியில் அத்தலைப்பு இயக்குனர் கரண் ஜோஹர் வசம் இருந்தது. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த 'பிரம்மாஸ்திரா' படத்திற்கு முதலில் 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்து அப்பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
தற்போது ஜுனியர் என்டிஆர் படத்திற்காக அத்தலைப்பை அவரிடம் கேட்டதும், எந்தவிதமான தொகையும் பெற்றுக் கொள்ளாமல் அத்தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படத்திற்கும் 'டிராகன்' என்ற தலைப்பை அறிவித்துவிட்டார்கள். இத்தலைப்புக்கு ஜுனியர் என்டிஆர் படத்தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.