பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ளது. அந்தமானில் உள்ள சில தீவுகளில் இதற்கான படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் எனத் தெரிகிறது. அதன்பிறகு சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமக்க உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல். தற்போது படத்திற்கான தலைப்பு அறிவிப்பு மற்றும் அறிமுக வீடியோ ஒன்றிற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். அடுத்தவாரம் அந்த வீடியோவை வெளியிட உள்ளார்கள்.
கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளதால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக்கின் ஸ்டைலில் வழக்கம் போல ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.