தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 44வது படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என சமீபத்தில் அறிவித்தனர். 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் அந்தமானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பள தொகையாக பெற்று வந்தவர், இப்போது சூர்யா 44வது படத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளமாக நிர்ணயம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.