மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. கடந்த வாரம் வெளியான தமிழ்ப் படமான 'இந்தியன் 2', ஹிந்திப் படமான 'சர்பிரா' ஆகிய படங்களை விடவும் இந்தப் படம் கடந்த சில நாட்களில் மட்டுமே அதிக வசூலைப் பெற்றுள்ளதாம்.
படத்தின் மாபெரும் வெற்றிக்கு நாயகன் பிரபாஸ் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“எனது ரசிகர்களே, இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் நான் பூஜ்ஜியம். இந்தப் படத்திற்காக இயக்குனர் நாக் அஸ்வின் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். இவ்வளவு பணத்தை பணயம் வைத்ததற்காக துணிச்சலான தயாரிப்பாளர் அஸ்வினி தத்திற்கு நன்றி.
நான் ஒரு முறை தயாரிப்பாளர் தத்திடம் நிறைய பணம் செலவழிக்கிறீர்கள் என சொன்னேன். நாங்கள் அனைவரும் கவலைப்பட்டடோம். ஆனால், அவர் என்னிடம் கவலைப்பட வேண்டாம், நாங்கள் பெரிய வெற்றியைக் கொடுப்போம், மிக உயரந்த தரமான படத்தைக் கொடுப்போம் என்று உறுதியளித்தார்.
இந்திய சினிமாவின் பெரிய ஜாம்பவான்களான அமிதாப், கமல் ஆகியோருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களான ஸ்வப்னா, பிரியங்கா, நாக் அஸ்வின் ஆகியோருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். மிக அழகான தீபிகாவிற்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிதாக இருக்கும்,” என்றார் பிரபாஸ்.