இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. கடந்த வாரம் வெளியான தமிழ்ப் படமான 'இந்தியன் 2', ஹிந்திப் படமான 'சர்பிரா' ஆகிய படங்களை விடவும் இந்தப் படம் கடந்த சில நாட்களில் மட்டுமே அதிக வசூலைப் பெற்றுள்ளதாம்.
படத்தின் மாபெரும் வெற்றிக்கு நாயகன் பிரபாஸ் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“எனது ரசிகர்களே, இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் நான் பூஜ்ஜியம். இந்தப் படத்திற்காக இயக்குனர் நாக் அஸ்வின் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். இவ்வளவு பணத்தை பணயம் வைத்ததற்காக துணிச்சலான தயாரிப்பாளர் அஸ்வினி தத்திற்கு நன்றி.
நான் ஒரு முறை தயாரிப்பாளர் தத்திடம் நிறைய பணம் செலவழிக்கிறீர்கள் என சொன்னேன். நாங்கள் அனைவரும் கவலைப்பட்டடோம். ஆனால், அவர் என்னிடம் கவலைப்பட வேண்டாம், நாங்கள் பெரிய வெற்றியைக் கொடுப்போம், மிக உயரந்த தரமான படத்தைக் கொடுப்போம் என்று உறுதியளித்தார்.
இந்திய சினிமாவின் பெரிய ஜாம்பவான்களான அமிதாப், கமல் ஆகியோருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களான ஸ்வப்னா, பிரியங்கா, நாக் அஸ்வின் ஆகியோருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். மிக அழகான தீபிகாவிற்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிதாக இருக்கும்,” என்றார் பிரபாஸ்.