ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. கடந்த வாரம் வெளியான தமிழ்ப் படமான 'இந்தியன் 2', ஹிந்திப் படமான 'சர்பிரா' ஆகிய படங்களை விடவும் இந்தப் படம் கடந்த சில நாட்களில் மட்டுமே அதிக வசூலைப் பெற்றுள்ளதாம்.
படத்தின் மாபெரும் வெற்றிக்கு நாயகன் பிரபாஸ் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“எனது ரசிகர்களே, இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் நான் பூஜ்ஜியம். இந்தப் படத்திற்காக இயக்குனர் நாக் அஸ்வின் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். இவ்வளவு பணத்தை பணயம் வைத்ததற்காக துணிச்சலான தயாரிப்பாளர் அஸ்வினி தத்திற்கு நன்றி.
நான் ஒரு முறை தயாரிப்பாளர் தத்திடம் நிறைய பணம் செலவழிக்கிறீர்கள் என சொன்னேன். நாங்கள் அனைவரும் கவலைப்பட்டடோம். ஆனால், அவர் என்னிடம் கவலைப்பட வேண்டாம், நாங்கள் பெரிய வெற்றியைக் கொடுப்போம், மிக உயரந்த தரமான படத்தைக் கொடுப்போம் என்று உறுதியளித்தார்.
இந்திய சினிமாவின் பெரிய ஜாம்பவான்களான அமிதாப், கமல் ஆகியோருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களான ஸ்வப்னா, பிரியங்கா, நாக் அஸ்வின் ஆகியோருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். மிக அழகான தீபிகாவிற்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிதாக இருக்கும்,” என்றார் பிரபாஸ்.