ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் நடிகை ஸ்ரீ லீலா. மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட், உஸ்தாத் பகத்சிங் மற்றும் ரவி தேஜாவின் 75வது படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில் சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் விஸ்வம்பரா படத்தில் நடிக்க ஸ்ரீ லீலாவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மல்லிடி வசிஷ்டா என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஏற்கனவே நடிகை திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக தான் ஸ்ரீ லீலாவை அணுகினார்கள் என்றும் இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை தருவதற்கும் தயாராக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வளர்ந்து வரும் இந்த சூழலில் இப்படி ஒரு பாடலுக்கு ஆடினால் தனது திரையுலக பயணத்தில் பாதிப்பு ஏற்படும் என கருதியதால் இந்த வாய்ப்பை ஏற்க ஸ்ரீ லீலா மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.