பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் நடிகை ஸ்ரீ லீலா. மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட், உஸ்தாத் பகத்சிங் மற்றும் ரவி தேஜாவின் 75வது படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில் சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் விஸ்வம்பரா படத்தில் நடிக்க ஸ்ரீ லீலாவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மல்லிடி வசிஷ்டா என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஏற்கனவே நடிகை திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக தான் ஸ்ரீ லீலாவை அணுகினார்கள் என்றும் இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை தருவதற்கும் தயாராக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வளர்ந்து வரும் இந்த சூழலில் இப்படி ஒரு பாடலுக்கு ஆடினால் தனது திரையுலக பயணத்தில் பாதிப்பு ஏற்படும் என கருதியதால் இந்த வாய்ப்பை ஏற்க ஸ்ரீ லீலா மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.