ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷோபா சந்திரசேகர், இன்றைய முன்னணி நடிகர், அரசியல் தலைவர் விஜய்யின் அம்மா என்கிற அளவில்தான் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். சிலருக்கு அவர் நல்லதொரு கர்நாடக இசை பாடகி என்பது தெரியும்.
பலரும் அறியாத பல முகங்கள் அவருக்கு உண்டு. ஷோபாவின் அப்பா ஒரு இசை குழுவையும், ஒரு நாடக குழுவையும் நடத்தி வந்தார். அந்த இசை குழுவில் பாடகியாவும், நாடகத்தில் நடிகையாகவும் தனது கலை வாழ்க்கையை தொடங்கினார் ஷோபா. நாடகங்களை இயக்க வந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர். நாடகங்களுக்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா.
ஷோபாவின் தந்தையின் நாடகங்களை இயக்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகரை தனது வீட்டிலேயே தங்க வைத்தார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரை அவருக்கு மிகவும பிடித்துப்போகவே தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது ஷோபாவுக்கு வயது 17. அடுத்த வருடமே விஜய்யை பெற்றெடுத்தார். ஷோபா இந்து, சந்திரசேகர் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
ஆனாலும் ஷோபாவுக்கு நடிப்பதை விட பாடுவதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் பெரிய குருமார்களிடம் முறைப்படி இசை கற்றார். வீணை இசைக்க கற்றார். திருமணமான புதிதில் எஸ்.ஏ.சந்திரேசகர் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது ஷோபாவின் பாடல் வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது.
பின்னாளில் பாடகி, வீணை இசை கலைஞர் என்பதோடு இன்னிசை மழை, நண்பர்கள் என்ற இரண்டு படங்களையும் இயக்கினார். 13 படங்களுக்கு கதை எழுதினார், 9 படங்களை தயாரித்தார். இப்படி சகலகலாவல்லியாக இருந்த ஷோபா சந்திரசேகருக்கு இன்று 67வது பிறந்தநாள்.